Saturday, May 17, 2014

அபூர்வமான பாசன் பழம் (தாட் பூட் பழம் ) விதை என்னிடத்தில்  கிடைக்கும் .
நல்ல சத்தான பழம் , இந்தியாவில் இபபோதுதான் கிடைக்கிறது , விருப்பம் உள்ள நண்பர்கள் என்னிடத்தில் தொடர்பு கொள்ளலாம்


இப்படிக்கு
இராமதாஸ் 

Monday, July 15, 2013

சுரபாலர் அருளிய விருட்ச ஆயுர்வேதம் - 1000ஆண்டுகளுக்குப் பின் தமிழில்.

இந்த அற்புதமான நூல் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சுரபாலர் அவர்களால் சம்ஸ்கிருதத்தில் எழுத்துருவம் பெற்றது. பின்னாட்களில் கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மொழி பெயர்க்கப்படாமல் சுமார் 200 ஆண்டுகள் இருந்தது. பின் டாக்டர். நளினி சதாலே அவர்களால் 1996 ஆண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கத்தை இயற்கை விஞ்ஞானி..ஆர்.எஸ். நாராயணன் மொழிபெயர்த்து 2005 ஆண்டு வெளியிட்டிருக்கிறார். திரு. ஆர்.எஸ். நாராயணன் அவரது மாடித்தோட்டத்தில்
அதிலிருந்து சில பாடல்கள்

பத்து புத்திரர்களைப் பெற்று
அவர்கள் செய்யும் தந்தைக் கடன்களை விட ஐந்து
மரங்கள் நட்டு அவை வழங்கும்
இலை, மலர், கனிகள், மேலானவை.
பாடல் எண் :5
பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம்
பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்
பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்கு சமம்
பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம்
பாடல் எண் :6
இந்தப் பூமியில் மரங்களே மனிதனுக்கு
எல்லையில்லா மகிழ்ச்சியை வழங்கும்.ஏனெனில்
அவை நம்மைக் கொடிய வறுமையிலிருந்து காப்பாற்றுகின்றன.
அவ்வாறு காப்பாற்றுவதால் “ த்ரவஹ” (ரட்சகர்) என்று
மரங்களை அழைக்கிறோம்.
ஆகவே, மரங்களை வளர்க்கவேண்டும்.
பாடல் எண் :97

மரங்கள் பூத்துக் காய்க்காவிட்டால்
எள், பார்லி, கொள்ளுடன் உளுந்தும் பாசிப்பயிறும்
கலந்த குளிர் நீரை மண்ணில் இட்டால்
மரங்கள் பூத்துக்குலுங்கிக் கிளைகள் பெருக்கும்.
பாடல் எண் :215
புத்தகத்தின் சிறப்பு சம்ஸ்கிருத சுவடியின் மூலமும் அச்சிடப்பட்டிருப்பது. 323 பாடல்கள் உள்ளது. இது தவிர குணபஜலம், E.M, பஞ்சகாவியம் என பழைய, புதிய நுண்ணுயிர் பெருக்க தொழில் நுட்பங்களும் விவரிக்கப்பட்டுள்ளது. மொத்ததில் விவசாய்களிடம் அவசியம் இருக்கவேண்டிய தொழில் நுட்பங்கள் நிறைந்த நமது பாரம்பரிய விவசாயத்தை விளக்கும் நூல். எழுத்துருவம் பெற்று 1000 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் கிடைக்கிறது. இயற்கை விவசாயத்திற்கு மாறும் அன்பர்களுக்கு உபயோகமான நூல். இந்த நூலை ஆதரவற்ற குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஆசிரியர் அர்ப்பணித்துள்ளார்.

கிடைக்குமிடம்.
திரு. ஆர்.எஸ். நாராயணன்
5/47 B சவுந்தரம் நகர் அம்பாத்துரை,
காந்திகிராமம் அஞ்சல்
திண்டுக்கல் 624 302
தொலைபேசி : 95451- 2452365

copy from  http://maravalam.blogspot.in/

by
ramadoss

Tuesday, March 13, 2012

பல்லிளிக்கும்  விவசாயம் , மரவள்ளி , கரும்பு , தேங்காய்
,விலை  ஆட்கள் கூலிக்கே சரியாக உள்ள நிலை

எங்கே  போகிறது நாடு

பாவம் விவசாயி, கேட்க நாதில்லை




Thursday, March 24, 2011

இலவச கையேடு

Thursday, July 1, 2010

Kekalayo kekalayo

Yaradi nee mohini - Engeyo partha mayakam